இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கழிவறைகளைக் கட்ட வேண்டும்
பிப்.06,2010 ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உலகளாவிய வளர்ச்சித் திட்ட இலக்கை 2015ம் ஆண்டுக்குள்
எட்ட வேண்டுமெனில், இந்தியா அடுத்த ஐந்தாண்டுகளில் பல்லாயிரக்கணக்கான கழிவறைகளைக் கட்ட
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து
வருகின்ற போதிலும் தொழிற்நுட்பம் பலரது வாழ்வை மாற்றியிருக்கின்ற போதிலும் இன்னும் நூறு
கோடிக்கு மேற்பட்டோருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.