பிப்.05,2010 அன்பர்களே, அருட்பணி முனைவர் ஜான்குழந்தை, இந்திய இலத்தீன்ரீதி ஆயர் பேரவையின்
குருக்கள் ஆணையச் செயலர். திருச்சி புனித பவுல் குருத்துவ கல்லூரியில் அதிபராகவும் பேராசிரியராகவும்
பணியாற்றியிருப்பவர். வருகிற செவ்வாயன்று வேளாங்கண்ணியில் தொடங்கும் மூன்று நாள் இந்திய
தேசிய அருட்பணியாளர்கள் மாநாட்டின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்திவருகிறவர். கோட்டாறு
மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்பணியாளர் ஜான் குழந்தையிடம், இம்மாநாடு பற்றித் தொலை பேசி
வழியாகக் கேட்டோம்