அருட் தந்தை எம்மானுவேல் கெர்கெட்டா ஜஷ்பூர் ஆயராக திருநிலைபடுத்தப்பட்டார்
பிப்.04,2010 அருட் தந்தை எம்மானுவேல் கெர்கெட்டா இச்செவ்வாயன்று சட்டிஸ்கரின் ஜஷ்பூர்
மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயராக திருநிலைபடுத்தப்பட்டார். 58 வயதான ஆயர் கெர்கெட்டாவை ராஞ்சி உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் டெலெஸ்போர்
டோப்போ ஆயிரக்கணக்கான விசுவாசிகள் முன்னிலையில் ஆயராக திருநிலைபடுத்தினார். கர்தினால்
டோப்போவுடன் ரைகர் மறைமாவட்ட ஆயர் பால் டோப்போவும் ராய்பூர் உயர்மறைமாவட்ட பேராயர் Joseph
Augustine Charanakunnelம் இந்தத் திருநிலைத் திருச்சடங்கில் கலந்து கொண்டனர்.