2010-02-03 15:24:35

கொல்கத்தா புத்தக கண்காட்சியில் இயேசு சபையினர் இந்தியாவில் முதல் முதலாக ஆரம்பித்த அச்சகத்தினை நினைவுறுத்தும் பகுதி


பிப்.03,2010 கடந்த பத்து நாட்களாக நடைபெற்று, இச்செவ்வாயன்று முடிவுற்ற கொல்கத்தா புத்தக கண்காட்சியில் இயேசு சபையினர் இந்தியாவில் 1556ல் முதல் முதலாக ஆரம்பித்த அச்சகத்தினை நினைவுறுத்தும் வண்ணம் ஒரு பகுதி அமைக்கப்பட்டிருந்தது. கொல்கத்தாவில் இயேசு சபையினர் நடத்தி வரும் St Xavier’s கல்லூரி 150 ஆண்டு சேவையை கொண்டாடிவரும் இவ்வேளையில், இயேசுசபையினர் பல்வேறு வழிகளில் இந்திய மக்களுக்கு சேவை செய்துள்ளதை நினைவுறுத்தும் வகையில் இக்கண்காட்சியின் ஒரு பகுதி அமைக்கப்பட்டதெனவும், அதன் ஒரு அங்கமாக இந்த முதல் அச்சகத்தின் வடிவமைப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதெனவும் St Xavier’s கல்லூரி  முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலர் Snehasis Sur செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.