புனித பூமியின் அமைதிக்கான இஞ்ஞாயிறன்று உலகின் நானூறுக்கும் மேற்பட்ட நகரங்களில் 24
மணிநேரம் செபம்
சன.30,2010 புனித பூமியின் அமைதிக்கான இரண்டாவது உலக தினத்தையொட்டி இஞ்ஞாயிறன்று உலகின்
நானூறுக்கும் மேற்பட்ட நகரங்களில் 24 மணிநேரம் செபவழிபாடுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித
பூமியில் அமைதி இடம் பெறுவதற்காக இடம் பெறும் இந்தச் செபவழிபாடுகளில் ஐரோப்பா, அமெரிக்க
ஐக்கிய நாடு, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளின் தனிநபர்கள், குழுக்கள்,
துறவு சபைகள், கழகங்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன. உரோம், நியுயார்க், கிராக்கோவ், இன்னும்,
பல சிறிய நகரங்களிலும் திருப்பலி, திருநற்கருணை ஆராதணை மற்றும்பிற செபங்கள் நடைபெறும்.