“இறைவாக்கினர்
எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.” இன்றைய நற்செய்தியில் இயேசு
கூறும் பொன்மொழிகள் இவை. இந்தக் கூற்றின் ஆழத்தை மனித வரலாறு ஒவ்வொரு நூற்றாண்டிலும்
உணர்ந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டில் இறைவாக்கினராய் கறுப்பின மக்களின் விடுதலை
வீரனாய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்து, அங்கேயே கொல்லப்பட்ட மார்ட்டின் லூதர் கிங்
கூறிய பல பொன்மொழிகளில் இரண்டு நமது இன்றைய நல்லெண்ணங்கள் ஆகட்டும்.
இருள்
இருளை விரட்ட முடியாது. ஒளியே இருளை விரட்டும். அதுபோல் வெறுப்புவெறுப்பை
வெல்ல முடியாது. அன்பே வெறுப்பை வெல்லும். நீ குனிந்து கொடுக்காதே.
நீ குனிந்தால் தான் வேறொருவர் உன் முதுகில் ஏறி சவாரிசெய்ய முடியும்.
இதையே
நம் பழமொழியும் சொல்கிறது: “குட்ட குட்ட குனிபவன் முட்டாள், குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்”
என்று. நம் தேசியக் கவிஞர் தாகூர் இதை வேறொரு வகையில் அழகியதொரு செபமாய்க் கூறியுள்ளார்:
“தலைக்கனம் மிகுந்த செல்வந்தர் முன் நான் மண்டியிட்டுப் பணியா சக்தியை எனக்குத் தருவாய்.”