2010-01-29 15:27:28

நலவாழ்வுப் பணிக்கான திருப்பீட அவை உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி உரோமையில் மூன்று நாள் கருத்தரங்கு


சன.29,2010 18வது உலக நோயாளர் தினம், நலவாழ்வுப் பணிக்கான திருப்பீட அவை உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு மூன்று நாள் கருத்தரங்கும் கலை அருங்காட்சியகமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"துன்புறுவோருக்கான அன்புப் பணியில் திருச்சபை" என்ற தலைப்பில் உரோமையில் பிப்ரவரி 9 முதல் 11 வரை கருத்தரங்கு நடைபெறும்.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மற்றும் அவரின் துன்பங்களை மையப்படுத்திய 28 வகையான கலைப் பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

லூர்து அன்னை விழாவான வருகிற பிப்ரவரி 11ம் தேதி 18வது உலக நோயாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.