வியட்நாமில் Dong Chiemபங்குமக்களைகாவல்துறையினர்தாக்கியுள்ளதைஅம்மறை மாவட்டம் வன்மையாய்
கண்டித்துள்ளது
சன.27,2010 வியட்நாமின் Hanoi உயர்மறை மாவட்டத்தைச் சேர்ந்த Dong Chiem பங்குமக்களை காவல்
துறையினர் தாக்கியுள்ளதை அம்மறை மாவட்டம் வன்மையாய் கண்டித்துள்ளது. Dong Chiem பங்கின் கல்லறை
ஒன்றை அரசு ஆக்ரமிக்கும் நோக்கத்தோடு அக்கல்லறையிலுள்ள சிலுவையைக் காவல் துறையினர் தகர்த்ததிலிருந்து
ஆரம்பமான போராட்டங்களில், பலர் காவல்துறையினரின் தடியடிகளால் காயமடைந்துள்ளனர். உலக மீட்பர் சபையைச்
சார்ந்த அருட்சகோதரர் Anthony Nguyen Van Tang காவல் துறையினரின் வெறித் தாக்குதலால்,
சுயநினைவிழந்துள்ளார் என செய்திகுறிப்பொன்று கூறுகிறது.காவல்துறையினரின் இந்தத் தாக்குதல்களுக்குப்
பதில் கூறும் வகையில், விசுவாசிகள் செபத்திலும், திருவிழிப்புகளிலும் ஈடுபடவேண்டுமென Hanoi உயர் மறை
மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளிலும் அச்சிசியின்
புனித பிரான்சிஸ் உருவாக்கிய சமாதானத்தின் செபத்தைத் தொடர்ந்து வேண்டுமாறும் மறைமாவட்ட
பொறுப்பாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.