2010-01-27 15:28:45

எல் சால்வதோரின் மறைந்த பேராயர் Oscar Romero, சீனாவின் மறைபரப்புப் பணியாளர் மத்தேயோ ரிச்சி இருவரையும் புனிதராக்கும் முயறசி


சன.27,2010 எல் சால்வதோரின் மறைந்த பேராயர் Oscar Romeroவைப் புனிதராக உயர்த்தும் நம்பிக்கையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை. 1980ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பேராயர் Oscar Romero திருப்பலி ஆற்றியபோது கொல்லப்பட்டார். அந்த நிகழ்வின் 30ஆம் ஆண்டு நிறைவுறும் போது, எல் சால்வதோர் ஆயர் பேரவை, இந்த தங்கள் விருப்பத்தையும், நம்பிக்கையையும் திருத்தந்தைக்குத் தெரிவித்துள்ளதாக சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez கூறியுள்ளார்.
சான் சல்வதோரின் பேராயர் Jose Luis Escobar Alas,  பேராயர்  Romero மரணமடைந்த முப்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில், அவரைப் புனித நிலைக்கு உயர்த்தும் வகையில் தனிப்பட்ட பக்தி முயற்சிகளை மேற்கொள்ளும்படி விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், சீனாவில் மறைபரப்புப் பணியில் முழுமையாய் ஈடுபட்ட அருட்தந்தை மத்தேயோ ரிச்சி மறைந்த 400வது ஆண்டை நினைவுகூரும் இந்த ஆண்டில், இத்தாலியில் அவர் பிறந்து வளர்ந்த Macerata மறைமாவட்டம் அருட்தந்தை ரிச்சியைப் புனிதராக்கும் முயற்சியை மீண்டும் புதுப்பித்துள்ளதென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.