2010-01-25 15:43:34

உலகில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - ஐ.நா. நிறுவனம் அறிக்கை


சன.25,2010 உலகில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எதிநோக்கப்படும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
2045ம் ஆண்டில் உலகில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை, 15 வயதிற்கு உட்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் எனக் கூறும் இவ்வறிக்கை, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொருளாதார வளர்ச்சி, சேமிப்பு, முதலீடு, தொழிலாளர், வரி விதிப்பு போன்றத் துறைகள் பெரிய அளவில் பாதிப்பைக் காணும் எனவும் கூறுகிறது.ஆசிய நாடுகளில் பெண் குழந்தை பிறப்புக்கான எண்ணிக்கை குறைந்து வருவது குறித்தும் ஐ.நா. தன் அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.