2010-01-23 14:40:29

செர்பிய ஆர்த்தாடாக்ஸ் சபையின் புதிய பிதாப்பிதாவுக்குத் திருத்தந்தை வாழ்த்து


சன.23,2010 செர்பிய ஆர்த்தாடாக்ஸ் சபையின் புதிய பிதாப்பிதாவாகப் பணியேற்கும் பிதாப்பிதா இரினெஜூக்குத் தமது வாழ்த்துத் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

செர்பிய ஆர்த்தாடாக்ஸ் சபை ஒன்றிப்பிலும் ஆன்மீகத்திலும் வளருவதற்கும் பிற திருச்சபைகளோடும் திருச்சபை சமூகங்களோடும் சகோதரத்துவ பிணைப்பைக் கட்டி எழுப்புவதற்கும் இறைவன் இவருக்கு மனபலத்தைத் தருமாறு தான் செபிப்பதாக அத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

மேலும், இப்புதிய பிதாப்பிதாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் வால்ட்டர் காஸ்பர், இறையியல் உரையாடல்வழி கிறிஸ்தவ சபைகள் மத்தியில் ஐக்கியம் வளர உழைப்பதற்கானத் தனது செபத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் செர்பிய ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் சுமார் 75 இலட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.