வேட்டைக்கு ஆணும் வீட்டுக்குப் பெண்ணும் என்பது, அன்று இயல்பான
முடிவே.
இன்று இருவரும் அலுவலகம் எனும்போது பகிர்தலும் இயல்பாய் வந்திடல் வேண்டும்.
ஆனால்,
வெளி
உலகில் எத்தனை சாதித்தாலும், வீட்டுக்குள் மனைவி, மருமகள், தாய் என்பதன் கற்காலக் கடமைகளும்
தடையின்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே எதிர்பார்ப்பாய் இருக்கிறது.
கேள்விக்
கேட்டால், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தொலைத்தவள் பட்டியலில் இடம்பெற வேண்டியிருக்கிறது.
இதையொட்டியே
இரு பக்க குழப்பம் ஒன்று.
உரிமை என்பது கடமைகளிலிருந்து விடுதலை பெறவா?
அல்லது
இங்கு கடமைகளைக் காட்டி உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளனவா?
தீர்ப்புகள் கிட்டலாம்.
அனால்
நீதியோடு கூடியதாய் அது இருக்குமா என்பதே கேள்விக்குறி.