2010-01-21 15:34:12

சனவரி 22-நாளும் ஒரு நல்லெண்ணம்


RealAudioMP3
ஒரு குரங்குக்கு இரு குட்டிகள் பிறந்தன. அது ஒரு குட்டி மீது மிகுந்த அன்பு காட்டியது. அடுத்த குட்டியை கண்டு கொள்ளவே இல்லை. ஒருநாள் சிலர் அந்தக் குரங்கை விரட்டிப் பிடிப்பதற்காக ஓடினர். உடனே அது, தனக்கு விருப்பமான குட்டியை மட்டும் தன்னுடன் தூக்கிக் கொண்டு ஓடியது. தாய்க் குரங்கால் புறக்கணிக்கப்பட்ட அந்தக் குட்டியோ ஓடி ஒரு புதரினுள் ஒளிந்து கொண்டது. வேகமாக நடந்து சென்ற ஆள்கள் இந்தக் குட்டியை கவனிக்கவில்லை. ஆனால் வேகமாக ஓடியத் தாய்க்குரங்கு, தனக்குப் பிடித்த குட்டியுடன் வேகம் வேகமாக மரக்கிளைகளில் தாண்டியதால் குட்டியின் தலை அடிபட்டு இறந்து போனது. அந்த ஆள்கள் திரும்பிச் சென்றவுடன், அந்தத் தாய்க்குரங்கு தான் வெறுத்து ஒதுக்கிய குட்டியைத் தேடிச் சென்றது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அது தனிமையானது. கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. பெற்றதாய் பால்குடிக்கும் தன் மகவை மறந்தாலும் கடவுள் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை, கைவிடுவதுமில்லை.







All the contents on this site are copyrighted ©.