2010-01-18 14:58:26

கேரளாவின் சீரோ மலபார் ரீதி சபையின் இரு புதிய மறைமாவட்டங்களை உருவாக்கவும் ஆறு புதிய சீரோ மலபார் ரீதி ஆயர்களை நியமிக்கவும் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை


சன.18,2010 கேரளாவின் சீரோ மலபார் ரீதி சபையின் இரு புதிய மறைமாவட்டங்களை உருவாக்கவும், வெவ்வேறு மறைமாவட்டங்களுக்கென ஆறு புதிய சீரோ மலபார் ரீதி ஆயர்களை நியமிக்கவும் ஒப்புதலை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.
கோயம்பத்தூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளையும் பாலக்காட்டின் திருயேயூர் பகுதியையும் உள்ளடக்கிய ராமநாதபுரம் என்ற புதிய சீரோ மலபார் ரீதி மறைமாவட்டத்தை உருவாக்கி அதற்கு குரு Paul Alappatt ஐப் புதிய ஆயராகவும் நியமிக்க ஒப்புதல் வழகியுள்ளார் பாப்பிறை.
திருத்தந்தை வழங்கியுள்ள ஒப்புதலின்படி, கர்நாடகாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த ரீதியின் மாண்டியா மறைமாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு, புதிய ஆயராக குரு George Njaralakatt, திருச்சூரின் துணை ஆயராக, குரு Raphael Thattil தாமரஸேரி மறைமாவட்ட புதிய ஆயராக குரு Remigiose Inchananiyil இரிஞாலக்குடா புதிய ஆயராக குரு Paul Kannookadan, சீரோ மலபார் ரீதி தலைமைப் பீடத்தின் பணி ஆயராக குரு Bosco Putur ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தின் மனந்தவாடி பகுதி பத்ராவதி மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார் பாப்பிறை.







All the contents on this site are copyrighted ©.