இந்தியஆயர்பேரவையின்கூட்டம்முதன்முறையாகஅஸ்ஸாம்மாநிலத்தில்
நடைபெறும்
சன.18,2010 இந்திய ஆயர் பேரவையின் கூட்டம் முதன் முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில் பிப்ரவரி 24 முதல்,
மார்ச் 3 ஆம் தேதி வரை இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன கால இளைஞர்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான திருச்சபையின் பதில் மொழி குறித்து விவாதிக்க
உள்ள இக்கூட்டத்தில் இந்தியா முழுவதிலுமிருந்து 160 ஆயர்கள் பங்கு கொள்வர். இது வன்முறையின்
இடமல்ல, மாறாக, கலாச்சார பன்மைத் தன்மைகள் நிறைந்த அழகான இடம் என்பதை ஆயர்கள் நேரடியாக
கண்டு கொள்ள நல்லதொரு வாய்ப்பை வழங்குவதாக அஸ்ஸாமின் இக்கூட்டம் இருக்கும் என்றார் அஸ்ஸாம்
தலத் திருச்சபைத் தலைவர்கள்.அஸ்ஸாம் மாநிலத்தில் முதன்முறையாக இந்திய ஆயர் பேரவைக் கூட்டம்
இடம் பெற உள்ளது குறித்து முதலமைச்சர் Tarun Gogoiயும் தன் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாகக்
கூறினார், குவஹாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில்.