2010-01-14 15:27:23

கிறிஸ்துமஸ் திருப்பலிக்கு முன் திருத்தந்தையை கீழே விழச்செய்த பெண்ணைத் திருத்தந்தை சந்தித்தார்


சன.14,2010 சென்ற ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் இரவன்று திருப்பலிக்கு முன் திருத்தந்தையை கீழே விழச்செய்த Susanna Maiolo என்ற பெண்ணை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை சந்தித்துப் பேசினார். தன் இரு உறவினர்களுடன் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய அந்தப் பெண், நடந்த சம்பவத்திற்காக திருத்தந்தையிடம் மன்னிப்பு கேட்டார் என்றும், திருத்தந்தை அவரை மன்னித்துவிட்டதாகக் கூறி, அவரது நலத்திற்குத் தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் என்றும் இச்சந்திப்பைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பீடத்தின் செய்தி அலுவலக இயக்குனர் இயேசுசபை குரு பெடெரிகோ லொம்பார்தி கூறினார். மேலும், இப்பெண்ணைக் குறித்த வழக்கு வத்திக்கான் நகரத்தின் நீதித்துறை வழியே தொடர்ந்து நடைபெறும் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.







All the contents on this site are copyrighted ©.