2010-01-13 15:04:45

குடியேற்றதாரர்மற்றும் அகதிகளுக்கான நாளையொட்டி, குடியேற்றதாரர்களின் ஆயரான Lynch வெளியிட்டுள்ள செய்தி


சன.13,2010 மனித சமுதாயத்தில் பிறக்கும் ஒவ்வொருவரின் மதிப்பும் இறைவனிடமிருந்து பெறும் மதிப்பு எனவும் அந்த மதிப்பு மனிதர்கள் சுமந்து செல்லும் அடையாள அட்டைகளில் அடங்காது என்றும் ஆயர் Patrick Lynch கூறியுள்ளார். வருகிற ஞாயிறன்று அனுசரிக்கப்படும் 96வது குடியேற்றதாரர், மற்றும் அகதிகளுக்கான நாளையொட்டி, குடியேற்றதாரர்களின் ஆயரான Lynch இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாண்டு ஜனவரி 17 ஞாயிறன்று அனுசரிக்கப்படும் இத்தினத்தில் “இளவயது அகதிகளும், குடியேற்றதாரர்களும்” என்பது மையப் பொருளாக அமையும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இறைமகன் இயேசுவும் குழந்தையாய் இருக்கும் போதே அகதியாக, குடியேற்றதாரராக துன்பங்களை அனுபவித்தவர் என்று திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் இத்தினத்திற்குரிய தனது செய்தியில் முன்பே குறிப்பிட்டுள்ளார். கடவுளால் படைக்கப்பட்டதாலும், கிறிஸ்துவால் மீட்கப்பட்டதாலும் மனிதர்கள் ஒவ்வொருவரும் மதிப்பு பெறுகின்றனர் எனவும் குடியேற்றதாரர்கள், அகதிகள் குறித்து நாடுகளுக்கிடையே நிலவும் பல்வேறு சட்டங்கள் இந்த மதிப்பை குறைத்துவிட முடியாது எனவும் ஆயர் Lynch குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.