2010-01-11 15:19:01

விசுவாசமே விசுவாசிகளுக்கு வாழ்வைக் கொணர்வது - கர்தினால் Telespore Toppo


விசுவாசமே வாழ்வு, அவ்விசுவாசம் விசுவாசிகளுக்கு வாழ்வைக் கொணர்வது மட்டுமல்ல, அனைத்தையும் இணைக்கிறது மற்றும் அவ்விசுவாசம் சாட்சிய வாழ்வில் வெளிப்படுத்தப் படுகிறது என்றார் ராஞ்சி பேராயர் கர்தினால் Telespore Toppo.

பெல்லாரி மறைமாவட்டத்தின் வைர விழாக் கொண்டாட்டங்களையொட்டி அம்மறை மாவட்ட மரியின் திருத்தலத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு உரை வழங்கிய கர்தினால், தங்கள் மேய்ப்பர்களோடு ஒன்றித்திருப்பதன் வழி வைரம் போன்ற உறுதியைப் பெறுவதுடன் விசுவாசத்தை அர்த்தமுள்ளதாக மாற்றலாம் என  விசுவாசிகளிடம் கூறினார்.

அனைவருக்குமான கத்தோலிக்கர்களின் ஒன்றிணைந்த பணி விசுவாச ஆழத்துடன் வெளிப்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Toppo.








All the contents on this site are copyrighted ©.