மடகாஸ்கரின் Antannarivo வின் முன்னாள் பேராயர் கர்தினால் Armand Gaetan Razafindratandra சனிமாலை இறைபதம் எய்தினார்.
மடகாஸ்கரின் Antannarivo வின் ஆளுனரின் பேரனாக 1925ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த கர்தினால்,
1954ம் ஆண்டு குருவாகவும், 1978ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். ஏனைய கிறிஸ்தவ
சபைகளுடன் இணைந்து கிறிஸ்தவ ஐக்கிய இறையியல் அவையை உருவாக்கியதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் இவர்.
கர்தினால்
Razafindratandra வின் மரணத்துடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 182ஆகக் குறைந்துள்ளது. இதில் 112 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியான 80 வயதுக்குட்பட்டவர்கள்.