2010-01-09 16:53:39

மாவோயிஸ்ட் குழு சுமார் மூவாயிரம் இளையோரை விடுவிக்கத் தொடங்கியிருப்பது குறித்து ஐ.நா.பாராட்டு


சன.09,2009 நேபாளத்தில் மாவோயிஸ்ட் புரட்சி குழுக்கள் சுமார் மூவாயிரம் இளையோரை விடுவிக்கத் தொடங்கியிருப்பதை வரவேற்றுள்ளார் சிறார் மற்றும் ஆயுதம் தாங்கிய மோதல்களுக்கான ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புத் தூதுவர் ராதிகா குமாரசாமி.

மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளவர்களில் சுமார் 500 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.

நேபாள அரசும் மாவோயிஸ்ட் கம்யூனிச குழுவும் கடந்த டிசம்பரில் கையெழுத்திட்ட செயல் திட்டத்தின் அடிப்படையில் இந்நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.








All the contents on this site are copyrighted ©.