2010-01-07 14:49:56

ஜார்கண்ட் மாநிலத்தில் திருச்சபை ஆற்றி வரும் பணிகளை அதிகம் பாராட்டுவதாக முதலமைச்சர் சிபு சொரேன் கூறினார்


சன.07,2010 ஜார்கண்ட் மாநிலத்தில் திருச்சபை ஆற்றி வரும் பணிகளை தான் அதிகம் பாராட்டுவதாகவும், திருச்சபை ஆயர்களின் செபங்களும் ஆதரவும் தனக்கு எப்போதும் தேவை என்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் அண்மையில் முதலமைச்சராகப் பதவி ஏற்ற சிபு சொரேன் கூறினார். ராஞ்சி மறைமாவட்ட கர்தினால் Telespore Toppo தலைமையில் ஆறு ஆயர்கள் இச்செவ்வாயன்று முதலமைச்சர் சொரேனைச் சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தரமான மருத்துவக் கல்லூரியும், அதோடு இணைந்த ஒரு மருத்துவமனையும் ஆரம்பிப்பதற்கு தலத் திருச்சபை 500 ஏக்கர் நிலப்பரப்பைப் பெறுவதற்கு தன் அரசு முழு உதவியும் செய்யும் என்று இச்சந்திப்பின் போது, முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்தினால் Toppo கடந்த சில ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சி அரசுக்கும் திருச்சபைக்குமிடையே மோதல்கள் ஏறபட்டதைக் குறிப்பிட்டு, புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் முதலமைச்சரிடம் தலத் திருச்சபை சந்தித்த பிரச்சனைகளை எடுத்துரைத்துள்ளதாகவும், அவர் அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு ஆவன செய்வதாக வாக்களித்திருப்பதாகவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.