சீனாவின் துணை ஆயர்Leo Yao Liangஇப்புதனன்று நல்லடக்கம்
செய்யப்பட்டார்
சன.07,2010 கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனது 86வது வயதில் காலமான சீனாவின் சிவான்சி (Xiwanzi)
மறைமாவட்ட துணை ஆயர் Leo Yao Liang இப்புதனன்று நல்லடக்கம் செய்யப்பட்டார். கடும் குளிரையும்,
பனியையும் பொருட்படுத்தாமல் 2,500 கத்தோலிக்கர்கள் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாகச்
செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. 1948ஆம் ஆண்டு குருவாக திருநிலைபடுத்தப்பட்ட Liang, 1958ஆம்
ஆண்டு சீன அரசால் சிறை படுத்தப்பட்டார். 26 ஆண்டுகள் சிறையிலிருந்த இவர் 2002ஆம் ஆண்டு
சீன அரசுக்குத் தெரியாதவாறு ஆயராகத் திருநிலைபடுத்தப்பட்டார். தற்போது சிவான்சி மறைமாவட்டத்தின் ஆயராக உள்ள
Andrew Hao Jinli 93 வயதானவர்; Alzheimer நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர். இவரைத் தொடர்ந்து
அந்த மறை மாவட்டத்தை நிர்வகிக்க ஆயரை நியமனம் செய்வதற்கு சீன அரசின் பல சட்டங்கள் தடையாக
இருப்பதால், வத்திக்கான் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் உள்ளதென செய்திக்குறிப்பு ஒன்று
கூறுகிறது. இந்த அடக்கச் சடங்கில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து யாரையும் சீன அரசு
அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.