2010-01-07 14:52:39

கத்தோலிக்கர்களைத் தாக்கிய காவல்துறையினருக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது வியட்னாமின் Hanoi உயர் மறைமாவட்டம்


சன.07,2010 தங்கள் பங்கு கல்லறையில் வைக்கப்பட்டிருந்த சிலுவையை உடைக்க முயன்ற காவல் துறையினரைத் தடுத்த கத்தோலிக்கர்களைத் தாக்கிய காவல துறையினருக்குத் தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது வியட்னாமின் Hanoi உயர் மறைமாவட்டம். இப்புதனன்று விடியற் காலை நடைபெற்ற இந்தத் தாக்குதலில் Dong Cheim பங்கைச் சார்ந்த பலர் காயம் பட்டனர் என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறியுள்ளது. சிலுவையைக் காவல்துறையினர் உடைக்க முயன்ற போது, அங்கு சூழ்ந்த கத்தோலிக்கர்கள் முழந்தாள் படியிட்டு செபித்ததாகவும், அவர்கள் மீது, காவல்துறையினர் கண்ணீர் புகை, தடியடி இவைகளைப் பயன்படுத்தியதாகவும் இச்செய்திக்குறிப்பு மேலும் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.