குருக்கள், தூய்மையான வாழ்வுக்கு எடுத்துக்காட்டுகளாக வாழ ஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தல்
சன.06,2009 குருக்கள், தூய்மையான வாழ்வுக்கு எடுத்துக் காட்டுகளாகவும், நம் ஆண்டவரோடு
நெருங்கிய உறவு கொண்டவர்களாகவும் உண்மையான கத்தோலிக்கக் கோட்பாடுகளைப் போதிப்பவர்களாகவும்
இருக்குமாறு ஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்பெயினின் Santiago de Compostela
வில் புனித ஜூபிலி ஆண்டு இந்த டிசம்பர் 31ம் தேதி மாலை தொடங்கப்பட்டுள்ள வேளை, Seville
செவிலெ பேராயர் ஹூவான் ஹோசே அசென்ஹோ வெளியிட்டுள்ள முதல் மேய்ப்புப்பணி அறிக்கையில் இவ்வாறு
குருக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய உலகின் உலகாயுதப்போக்கும் நுகர்வுப்போக்கும்
நற்செய்தியை வாழ்வதற்கு இக்கட்டாய் இருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ள பேராயர், திருச்சபை
இச்சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருச்சபையோடு ஒன்றிப்புணர்வு
கொள்வது இன்றியமையாதது என்றும் இறைமக்கள் சமுதாயம் தங்கள் குருக்களிடமிருந்து இறைவார்த்தையைக்
கேட்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் பேராயரின் அறிக்கை கூறுகிறது