ஒவ்வொரு ஆண்டின்
முடிவிலும், புத்தாண்டின் துவக்கத்திலும் நல்ல வழி நடப்பதற்கான தீர்மானங்களை ஒவ்வொருவரும்
நினைத்து பார்ப்போம். இல்லையா? என் நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய ஒரு கடிதத்தில்
நல்லவை நாற்பது என்ற ஒரு பட்டியல் அனுப்பியுள்ளார். அதிலிருந்து ஒரு சில எண்ணங்கள்:
ஆற்றல், ஆர்வம், அரவணைப்பு அழகான வாழ்வுக்கு நல்லது. கண்விழித்திருக்கும்
போதே கனவு காணப் பழகிக் கொள்வது நல்லது. இயற்கை உணவை அதிகம் உண்பதும், செயற்கை உணவைக்
குறைப்பதும் நல்லது. ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் நடப்பது நல்லது. அப்படி நடக்கும்
போது, சிரிப்பது மிகவும் நல்லது. மன பாரங்களைக் கரைக்கும் அரிய மருந்து சிரிப்பு. துரிதமாய்
ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அமைதியாய் பத்து நிமிடங்கள் அமர்வது
நல்லது.
அன்பு நெஞ்சங்களே, அவ்வப்போது இந்த நாற்பதிலிருந்து நல்லவைகள் இன்னும்
வரும்.