2010-01-05 15:27:32

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா திருத்தந்தையின் திருப்பலி


சன.05,2009 சனவரி 6 இப்புதனன்று வத்திக்கானில் ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா சிறப்பிக்கப்படும் வேளை, அன்று காலை பத்துமணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பெருவிழாத் திருப்பலி நிகழ்த்துகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இயேசு பெத்லகேமில் பிறந்தது மூன்று கீழ்த்திசை ஞானிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டதைச் சிறப்பிக்கும் இப்பெருவிழாவன்று ஆர்த்தாடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸைச் சிறப்பிக்கின்றனர்.

மேலும், 2009ம் ஆண்டில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்திய புதன் பொது மறைபோதகம், மூவேளை செப உரை போன்ற பல நிகழ்வுகளில் சுமார் 22 இலட்சம் விசுவாசிகளும் திருப்பயணிகளும் பங்கெடுத்தனர் என்று பாப்பிறை இல்ல அலுவலகம் அறிவித்தது.

கடந்த ஆண்டில் இந்நிகழ்வுகளுக்கென வழங்கப்பட்ட அனுமதி சீட்டுகளின் எண்ணிக்கையை வைத்து இவ்வெண்ணிக்கை கணக்கிடப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் அறிவித்தது







All the contents on this site are copyrighted ©.