திருத்தந்தை புனித சில்வெஸ்டர் காலத்தில் பேராலயங்கள் ஏராளமாகக் கட்டப்பட்டன. கி.பி.
325ல் நிசெயா திருச்சங்கம் வெற்றி நடை போட்டது. நீண்ட விசுவாச பிரமாணம் இதில்தான் தொகுக்கப்பட்டது.
இவ் காலத்தில் பேரரசன் கான்ஸ்ட்டைனோடு சேர்ந்து செயலாற்றியதால் திருச்சபைக்கு இத்தகைய
வெற்றி கிட்டியது. கத்தோலிக்கம் நாடு தழுவிய மதம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருச்சபைக்குப்
பேரமைதி கிடைத்தது. ஞாயிறு அரசு விடுமுறை நாளானது.