பொதுவாக
கண்ணி வெடிகள் 10 செ.மீ. ஆழத்தில் புதைக்கப்படுவது வழக்கம். ஆனால் விடுதலைப்
புலிகள் 13 செ.மீ. ஆழத்தில் கண்ணி வெடிகளைப் புதைத்துள்ளனர். ஒரு சதுர அடி பரப்பளவில்
கண்ணி வெடி இல்லை என்பதைக் கண்டறிய ஆகும் செலவு 3 டாலராகும்.
சுவிட்சர்லாந்து
அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவினர் கடந்த 7 ஆண்டுகளாக நிலக்கண்ணி வெடிகளை அகற்றும்
பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் வரை 1,000 நிலக்கண்ணி வெடிகள்
கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வட இலங்கைப்
பகுதியில் மட்டும் 15 லட்சம் நிலக்கண்ணி வெடிகள் பதிக்கப்பட்டிருக்கலாம்
என மதிப்பிடப்படுகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து கண்ணி வெடிகளை அகற்றும் பணி
நடைபெறுகிறது. இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டுள்ளது. இதில் பீரங்கிகளைத் தகர்க்கும் கண்ணி வெடிகளும் அடங்கும்.
தற்போது நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் 6 குழுக்கள் ஈடுபட்டுள்ளன.