வரலாற்றில் நிகழ்ந்தவை டிசம்பர் 24 புனிதர்கள் அடேலா மற்றும் இர்மினா திருவிழாக்கள்.
1294 – திருத்தந்தை 5ம் செலஸ்டின் பதவி விலகியதையடுத்து திருத்தந்தை 8ம் பொனிபாஸ்
தேர்நதெடுக்கப்பட்டார். 1524 - இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியரும் போர்த்துக்கீச
மாலுமியுமான வாஸ்கோட காமா இறந்தார். 1690 - யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக்
கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1777 – பசிபிக் பெருங்கடலிலுள்ள கிறிஸ்துமஸ் தீவு எனப்படும் கிரிட்டிமாட்டி தீவு
ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது 1914 - முதலாம் உலகப் போர்நிறுத்தம் கிறிஸ்துமஸ்
தினத்துக்காக நடைமுறைக்கு வந்தது. 1924 - அல்பேனியா குடியரசாகியது. 1939 – இரண்டாம்
உலகப் போரின் போது திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமைதிக்காக அழைப்பு விடுத்தார். 1954
- லாவோஸ் விடுதலை பெற்றது 1973 ல் ஈ. வெ. ராமசாமியும், 1987 ல் தமிழ்நாட்டின் முன்னாள்
முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனும் இறந்தனர்.