டிச.17,2009 உலக மானிட உரிமை தினம் கடைபிடிக்கப்பட்ட கடந்த வியாழனன்று தூத்துக்குடியில்
முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் மாபெரும் பேரணியை நடத்தினர். கடலில் மீன் பிடிப்பது
தொடர்பாக இந்திய நடுவண் அரசு அறிமுகப்படுத்தியுள்ள சட்ட மசோதாவை எதிர்த்து இப்பேரணி நடத்தப்பட்டது.
தூத்துக்குடி ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் அவர்கள் இதனைத் தொடங்கி வைத்தார். இப்பேரணி
குறித்து சமூக ஆர்வலர் அருள்தந்தை எக்ஸ.டி.செல்வராஜ் அவர்கள் விளக்குகிறார்.