நேபாளத்தின் அகதிகள் முகாம்களில் புதிய திட்டம் - இயேசு சபையினரின் அகதிகள் பணி
டிச.01,2009 பூட்டானிலிருந்து வெளியேறி, கிழக்கு நேபாளத்தின் அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் நேபாளத்தை பூர்வீகமாகக்
கொண்ட இளையோரிடையே வன்முறைகளைக் களைய புதிய திட்டம் ஒன்றைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது இயேசு
சபையினரின் அகதிகள் பணி மையம்.
அகதிகள் முகாம்களில் வன்முறை, போதைப் பொருள் மற்றும்
பாலின மீறல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதை கண்காணித்துள்ள JRS என்ற இம்மையம், அகதி இளையோருக்கென புதிய
திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளது.