போர்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்க முடியும் என்பதற்கு ஆர்ஜென்டினாவும் சிலியும்
சிறந்த உதாரணம்- திருப்பீட பேச்சாளர்
நவ.30,2009 போர்களை பேச்சுவார்த்தைகள் மூலம் தவிர்க்க முடியும் என்பதற்கு ஆர்ஜென்டினாவும்
சிலியும் சிறந்த உதாரணம் என்றார் திருப்பீட பேச்சாளர் இயேசு சபை குரு பெடெரிகோ லோம்பார்தி.
வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் Octava Dies என்ற வார நிகழ்ச்சியில் இக்கருத்தை
வெளியிட்ட திருப்பீட பேச்சாளர், ஆர்ஜென்டினா, சிலி இடையேயான அமைதி மற்றும் நட்புணர்வு
ஒப்பந்தம் திருப்பீடத்தின் தலையீட்டின் பேரில் உருவாக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டை, கடந்த
சனியன்று திருத்தந்தையுடன் இவ்விரு நாடுகளின் தலைவர்களும் சிறப்பித்ததைச் சுட்டிக்காட்டினார்.
அமைதி
மற்றும் பேச்சுவார்த்தைகளின் பாதையைத் தொடர்ந்து கட்டி எழுப்ப வேண்டியது இன்றைய உலகின்
அவசரத் தேவையாக உள்ளது எனவும் கூறினார் இயேசு சபை குரு லொம்பார்தி.