2009-11-30 16:11:16

பல்வேறு சிக்கல் நிறை சவால்களின் அதிகரிப்பை எதிநோக்கிவரும் கிறிஸ்தவத்திற்கு, கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த சாட்சியம் தேவை- திருத்தந்தை


நவ.30,2009 பல்வேறு சிக்கல் நிறை சவால்களின் அதிகரிப்பை எதிநோக்கிவரும் கிறிஸ்தவத்திற்கு, எக்காலத்தையும் விட தற்போது கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த சாட்சியம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட்.

இத்திங்களின் அப்போஸ்தலர் புனித அந்த்ரேயாவின் திருநாளையொட்டி Constantinople Ecumenical பிதாப்பிதா முதலாம் Barthalomeo வுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, கடந்த காலங்களில் இருசபைகளின் முழு ஐக்கியத்திற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதைக் குறித்த மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதுடன் முதல் ஆயிரம் ஆண்டுகளில் கிறிஸ்தவ ஐக்கியத்தில் ரோமை ஆயரின் பங்கு என்பது குறித்து அண்மையில் இரு சபைகளும் விவாதித்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐக்கியத்திற்கான முயற்சிகள் அதிகாரம் குறித்த கேள்விகளால் தடைபட்டு நிற்காமல், உண்மையிலும், பிறரன்பிலுமான பணியாக நோக்கப்பட வேண்டுமெனவும் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.