2009-11-28 14:47:46

இளையோரே, நீங்களே ஆசியாவில் திருச்சபையின் நம்பிக்கை, பிலிப்பைனஸ் கர்தினால்


நவ.28,2009 இளையோரே, நீங்களே ஆசியாவில் திருச்சபையின் நம்பிக்கை, இயேசுவின் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்தை தைரியத்துடனும் உறுதியுடனும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற அழைப்புடன் 5வது ஆசிய இளையோர் தினத்தை நிறைவு செய்தார் கர்தினால் ஒர்லாண்டோ கெவெதா.

பிலிப்பைனஸ் நாட்டு மனிலாவின் கவிட்டேயில் இம்மாதம் 20ம் தேதி தொடங்கிய இத்தினம் இச்சனிக்கிழமை நிறைவடைந்தது. இதில் 22 ஆசிய நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கு அதிகமான இளையோர் கலந்து கொண்டனர்.

அடுத்த ஆசிய இளையோர் தினம், 2012ம் ஆண்டில் தென் கொரியாவின் செயோலில் நடைபெறும் என, இதில் அறிவிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆசிய இளையோர் தினம், முதன் முறையாக தாய்லாந்தில் 1999ம் ஆண்டில் நடைபெற்றது.








All the contents on this site are copyrighted ©.