2009-11-28 14:46:40

ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குத் திருச்சபை மிகுந்த ஆர்வமுடன் உழைத்து வருகிறது, ஆயர்கள்


நவ.28,2009 ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குத் திருச்சபை மிகுந்த ஆர்வமுடன் உழைத்து வருகிறது என்று ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
டிசம்பர் முதல் தேதி கடைபிடிக்கப்படும் உலக எய்ட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவை, உலகில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை மிகுந்த அர்ப்பணத்துடன் செயல்பட்டு வருகிறது என்ற திருத்தந்தையின் கூற்றுக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் சிகிச்சை கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது என்ற கூற்று தவறானது, மாறாக மூன்றில் ஒருவருக்கே அது கிடைக்கிறது என்றும் அச்செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.