கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் கிறிஸ்துவைச் சந்திப்பதற்குத் தங்களையே தயாரிப்பதற்கு
திருவருகை காலம் அழைப்பு விடுக்கின்றது, Costa Rica ஆயர்கள்
நவ.27,2009 ஒவ்வொரு கிறிஸ்தவரும் தங்கள் வாழ்வின் இறுதியில் கிறிஸ்துவைச் சந்திப்பதற்குத்
தங்களையே தயாரிப்பதற்கு திருவருகை காலத்தின் ஒவ்வொரு ஞாயிறும் அழைப்பு விடுக்கின்றது
என்று கோஸ்ட்டா ரிக்கா Costa Rica ஆயர்கள் கூறியுள்ளனர்.
இஞ்ஞாயிறன்று துவங்கும்
திருவருகை காலத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள
கோஸ்ட்டா ரிக்கா நாட்டு ஆயர்
பேரவை, இந்தத் தயாரிப்பு காலத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும், நம்பிக்கை, உறுதி, சுயமனமாற்றம்
ஆகிய வழிகளில் தங்களை ஈடுபடுத்துமாறு கேட்டுள்ளனர்.
ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்துங்கள்
என்ற தலைப்பிலான ஆயர்களின் இச்செய்தி, வன்முறை, குடும்பம் பிளவுபடுதல், மனித வாழ்வு –
மனித மாண்பின் மீதான வெறுப்பு போன்ற சவால்களை கிறிஸ்தவ நம்பிக்கையுடன் எதிர் நோக்குவதற்கும்
அழைப்புவிடுக்கிறது.