2009-11-26 15:39:21

மெக்ஸிகோவில் ஒரே பாலினத் திருமணங்கள் குறித்த அறிக்கை வேதனையைத் தருவதாக கத்தோலிக்க அதிகாரிகள்


நவ.26,2009 மெக்ஸிகோ நகர மன்றத்தில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்படக்கூடும் என்று இப்புதனன்று வெளியிடப்பட்ட அறிக்கை மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக அந்நாட்டின் கத்தோலிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது குறித்த பொது மக்களின் எண்ணங்களைக் கேட்டறிந்த பின்னர் இது போன்ற முடிவுகளை மேற்கொள்ளாதது நல்லதல்ல என கத்தோலிக்க வழக்கறிஞர் மன்றத்தின் தலைவரான அர்மாந்தோ மார்தினேஸ் கோமஸ், மெக்சிகோ உயர்மறைமாவட்ட அதிகாரிகள் ஆகியோர் கருத்து தெரிவித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னால், மெக்ஸிகோ நகர மன்றத்தில் கருக்கலைப்பு குறித்த அறிக்கை வெளியான போதும் இதே போன்று மக்களின் எண்ணங்களை அறிய அரசு முற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.