2009-11-26 15:38:10

மும்பையில் நினைவு தினம், செப வழிபாடு 


நவ.26,2009 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களால் உயிரிழந்த 174 பேரை நினைவு கூறும் வண்ணம் இவ்வியாழனன்று மும்பையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக, மும்பையின் முக்கிய சாலைகளில் காவல் துறையினரும், படைவீரர்களும் அணிவகுப்பு  நடத்தினர். இவ்வணிவகுப்பின்போது தீவிரவாத தாக்குதல்களை உடனுக்குடன் சமாளிக்கும் வண்ணம் இந்தியா அண்மையில் பெற்றுள்ள வாகனங்கள், படகுகள் ஆகியவை இந்த அணிவகுப்பில் இடம் பெற்றன. இந்த நாளை நினைவு கூறும் வகையில், தாக்குதல்கள் நடந்த தாஜ்  ஹோட்டலுக்கருகே இந்திய வாசல் பகுதியில் மெழுகு திரிகளை ஏந்திய வண்ணம் செப வழிபாடு நடைபெறும் என்று செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது. இதுபோன்ற செப வழிபாடுகள் தாக்குதல்கள் நடந்த நரிமன் இல்லம், CST ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.