அயர்லாந்து நாட்டவரான துறவி புனித விர்ஜீலியுஸ், புவியியலில் நிபுணராக விளங்கியதால் மக்கள்
அவரை, நிலக்கணக்கியல் வல்லார் என்று அழைத்தனர். 767ம் ஆண்டில் ஆயரானார். வானியல், புவியியல்,
மனிதயியல் போன்றவைகளில் பல உயரிய கருத்துக்களை வெளியிட்டவர். ஆல்பின் ஸ்லாவ் மக்களின்
மனமாற்றத்தில் முக்கிய பங்காற்றியவர். புனித விர்ஜீலியுஸ் 784ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள்
நோயினால் இறந்தார்.