2009-11-21 16:50:37

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆங்கிலிக்கன் பேராயர் சந்திப்பு


நவ.21,2009 கத்தோலிக்கருக்கும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்படுவதற்கு இவ்விரு சபையினரும் ஒத்துழைப்பு வழங்குவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும், ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்சும் இசைவு தெரிவித்தனர்.

வத்திக்கானில் இச்சனிக்கிழமை இங்கிலாந்து ஆங்கிலிக்கன் பேராயர் ரோவன் வில்லியம்சை சந்தித்த திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபைக்கும் ஆங்கிலிக்கன் சபைக்குமிடையே அண்மையில் இடம் பெற்ற நிகழ்வுகள் பற்றியும் உரையாடினார்.

இந்த மில்லேனேய தொடக்கத்திலிருந்து உலகில் கிறிஸ்தவர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், இவற்றைச் சந்திப்பதற்கு இவ்விரு சபைகளுக்கிடையே ஒத்துழைப்பும் சாட்சிய வாழ்வும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இச் சந்திப்பில் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது







All the contents on this site are copyrighted ©.