அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே
துரத்தத் தொடங்கினார்.46 அவர்களிடம் ' என் இல்லம் இறைவேண்டலின் வீடு ' என்று மறைநூலில்
எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள் ' என்று கூறினார்.47 இயேசு
ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும்
மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.48 ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும்
தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.