2009-11-17 16:11:34

சைனாவின் அனைத்துக் குருக்களுக்குமென சிறப்புச் செய்தி - கர்தினால் தார்சிஸியோ பெர்தோனே.


நவ.17,2009 குருக்கள் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, சைனாவின் அனைத்துக் குருக்களுக்குமென சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சிஸியோ பெர்தோனே.

உள்நாட்டு மற்று வெளி விவகாரங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனத் தலத் திருச்சபைக்கான நம்பிக்கையின் அழைப்பாக இருக்கும் இந்நீண்ட கடிதம் 2007ஆம் ஆண்டு திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் சீனக் கத்தோலிக்கர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் வார்த்தைகளையும், குருக்கள் ஆண்டைத் துவக்கி வைத்த போது வழங்கிய செய்தியின் முக்கிய கருத்துக்களையும் மேற்கோள் காட்டியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.