2009-11-17 16:18:35

ஆஸ்திரேலியப் பிரதமர் தேசிய அளவிலான மன்னிப்பை வேண்டியுள்ளதை வவேற்பதாக அறிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்


நவ.17,2009 பிரிட்டனிலிருந்து கொணரப்பட்ட 7000 குழந்தை குடியேற்றதாரர்கள், ஆஸ்திரேலியாவின் அரசு மையங்களில் சரியான முறையில் கவனிக்கப்படாமல் தவறாக நடத்தப்பட்டது குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் தேசிய அளவிலான மன்னிப்பை வேண்டியுள்ளதை வவேற்பதாக அறிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.

அரசு மையங்களில் குழந்தைகள் தவறாக நடத்தப்பட்டதற்கான பிரதமர் கெவின் ரட்டின் மன்னிப்பு வேண்டுகோளை வரவேற்கும் அதே வேளை, திருச்சபை நிறுவனங்களில் குழந்தைகள் எப்போதாவது தவறாக நடத்தப்பட்டிருந்தால், அதற்காக தாங்கள் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்பதாகக் கூறியுள்ளனர் ஆயர்கள். 








All the contents on this site are copyrighted ©.