அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயர்கள் நல ஆதரவுத் திட்டத்தில் ஈடுபட தீர்மானம்
நவ.17,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நல ஆதரவுத் திட்டத்திற்குள்
புகுத்தப்படுவதற்கான வழிமுறைகளை அமெரிக்க ஆயர்கள் முன்வைக்கவில்லை, மாறாக, ஒவ்வொரு மனிதனின் வாழ்வதற்கான
உரிமை மதிக்கப்படவேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகக் கூறினார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் தலைவர்
கர்தினால் பிரான்சிஸ் ஜார்ஜ்.
நல ஆதரவு திட்டங்களில் வலியுறுத்த விரும்புவது ஒழுக்க
ரீதி கொள்கைகளேயன்றி அரசியலை அல்ல, ஏனெனில், நல ஆதரவு என்பது மனிதர்கள் தொடர்புடையது
மட்டுமல்ல, தீவிர ஒழுக்கரீதி மதிப்பெடுகளோடும் தொடர்புடையது என்றார் அவர்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள நல ஆதரவுத் திட்டங்கள் குறித்து அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், ஒரு தாயின் வயிற்றினுள் குழந்தையைக் கொல்வது நல ஆதரவுத்
திட்டத்தின் கீழ் வரமுடியாது என்பதால், கருகலைத்தலுக்கு மக்களின் வரிப்பணம் செலவிடப்
படக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.