2009-11-16 17:19:31

ஆயர் அம்புரோஸ் மதலைமுத்துவின் அடக்கச் சடங்குத் திருப்பலி நவ.17 பிற்பகல் 2.30 மணிக்கு கோயம்புத்தூர் பேராலயத்தில் நடைபெறும்


நவ.16,2009 இந்தியாவின் கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியின் முன்னாள் ஆயர் அம்புரோஸ் மதலைமுத்துவின் அடக்கச் சடங்குத் திருப்பலி இச்செவ்வாயன்று நவ.17 பிற்பகல் 2.30 மணிக்கு கோயம்புத்தூர் பேராலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஞ்ஞாயிறன்று காலமான, ஓய்வு பெற்ற ஆயர் அம்புரோஸ், 1925ம் வருடம் கோயம்புத்தூரின் நகலூரில் பிறந்து 1951ம் வருடம் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1971ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை தூத்துக்குடியின் ஆயராகவும், 1979 முதல் 2002ம் ஆண்டுவரை கோயம்புத்தூர் ஆயராகவும் சேவையாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆயர் அம்புரோஸின் இறுதி அடக்கச் சடங்குத் திருப்பலி இச்செவ்வாயன்று நவ.17 பிற்பகல் 2.30 மணிக்கு கோயம்புத்தூர் பேராலயத்தில் நடைபெறும்.








All the contents on this site are copyrighted ©.