2009-11-13 17:20:19

பிலிப்பின்ஸில் விடுவிக்கப்பட்டுள்ள  அருட்தந்தை சின்னோட், தனது பணியை மீண்டும்  அந்நாட்டில் தொடர விரும்புவதாக அறிவிப்பு


நவ.13,2009 பிலிப்பின்ஸில் கடந்த ஒரு மாத காலமாகக் கடத்தி வைக்கப்பட்டிருந்து, நவம்பர் 11, இப்புதன்  இரவு  விடுவிக்கப்பட்ட அருட்தந்தை மைக்கில் சின்னோட் தனது பணியை மீண்டும்  அந்நாட்டில் தொடர விரும்புவதாகத் தெரிவித்தார். விடுதலை அடைந்தபின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அருட்தந்தை சின்னோட், தன்னைக் கடத்தி சென்றவர்களால் ஆரம்பத்தில் தனக்கு ஏற்பட்ட பல கடினமான சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.  தன்னைக் கடத்திச் சென்றவர்கள் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் நன்கு பழக்கப்பட்டவர்கள் என்றும், நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் தன்னை மரியாதையோடும், பண்போடும் நடத்தி வந்ததாகவும் கூறினார். கடந்த ஒரு மாதமாகத் தன்னை விடுவிப்பதில் ஈடுபட்ட பலருக்கும் நன்றியைத் தெரிவித்தார், அருட்தந்தை சின்னோட்.








All the contents on this site are copyrighted ©.