2009-11-10 15:18:20

வசை மறைமாவட்டத்தின் புதிய ஆயர், பேராயர்-ஆயர் பெலிக்ஸ் அந்தோனி மச்சாடோ


நவ.10,2009 இந்தியாவின் வசை (Vasai) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பேராயர்-ஆயர் பெலிக்ஸ் அந்தோனி மச்சாடோவை Felix Anthony Machado இச்செவ்வாயன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இந்நாள்வரை நாசிக் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய பேராயர்-ஆயர் பெலிக்ஸ் மச்சாடோ, நாசிக் மறைமாவட்ட ஆயராக 2008ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பொறுப்பேற்றார்.

இவர், நாசிக் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் நேரடிச் செயலராகப் பணியாற்றியவர்.

1948ம் ஆண்டு பிறந்த பேராயர்-ஆயர் பெலிக்ஸ் மச்சாடோ, 1976ம் ஆண்டு மும்பை உயர் மறைமாவட்டதிற்கென குருவாகத் திருநிலைபடுத்தப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.