கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது குறித்து திருத்தந்தை பாராட்டு
நவ.06,2009 கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது 2002ம் ஆண்டில்
பாப்பிறை 2ம் ஜான் பவுலை அந்நாட்டிற்கு வரவேற்றது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.
கஜக்ஸ்தான் குடியரசு தலைவர் நூர்சுல்தான் நஜார்பாயேவை இவ்வெள்ளியன்று
வத்திக்கானில் சந்தித்து இருபது நிமிடங்கள் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பின்
இறுதியில், பிரமிடு வடிவத்திலான தலைநகர் ஆஸ்தானா அமைதி அரண்மனை நினைவுப் பொருள் ஒன்றைத்
திருத்தந்தைக்கு வழங்கினார் கஜக்ஸ்தான் குடியரசு தலைவர்.
கஜக்ஸ்தான், முன்னாள்
சோவியத் யூனியன் நாடுகளில், எண்ணெய் வளம் மற்றும் கனிம வளங்கள் நிரம்பிய பணக்கார நாடாகும்