பிரான்சின் முதலாம் குளோவிஸ் மன்னனின் நீதிமன்றத்தில் முக்கிய பிரமுகராக இருந்த லெயோனார்டு,
பிரான்சின் புனித ரெமிஜியுசால் மனந்திருப்பப்பட்டவர் என்று சொல்லப்படுகின்றது. கிறிஸ்தவத்திற்கு
மதம் மாறிய பின்னர், துறவியாகி நோபிலாக் துறவு மடத்தையும் தொடங்கி தனது இறப்பு வரை அதனை
நிர்வகித்தார். சிறைக் கைதிகளில் யாரை விடுதலை செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறாரோ அவர்களை
அரசர் உடனே விடுதலை செய்வார் என்று லெயோனார்டு பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் கூறுகின்றன