அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ' செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர்
ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்
பட்டது. தலைவர் அவரைக் கூப்பிட்டு ' உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள
கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது ' என்று அவரிடம்
கூறினார்.3 அந்த வீட்டுப் பொறுப்பாளர் ' நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து
என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும்
வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத்
தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும் '
என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக
வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம் ' நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?
' என்று கேட்டார்.6 அதற்கு அவர் ' நூறு குடம் எண்ணெய் ' என்றார். வீட்டுப் பொறுப்பாளர்
அவரிடம் ' இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும் ' என்றார். பின்பு
அடுத்தவரிடம் 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர் 'நூறு
மூடை கோதுமை' என்றார். அவர் 'இதோ உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார்.'நூறு
கோரோசு' என்பது கிரேக்க பாடம். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால்
தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில் ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில்
மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்.